சொல்லாக்கம் (Sollakkam)

0 Ratings

தமிழகத்தின் ஆட்சி மொழியாக அன்னைத் தமிழை அரியணையில் அமர்த்துவதற்குக் கலைச்சொல்லாக்கமே கைகொடுக்கிறது.இத்தகு சொல்லாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கான அடிப்படை நெறிமுறைகள், வழிமுறைகள்,வரையறைகள் அனைத்தையும் இந் நூல் வரலாற்று நோக்குடன் விளக்குகிறது.தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சிச்சொல்லகராதியுடன் சிறப்புச் சொல்லகராதிகளையும் பகுத்தாய்வு செய்து பல்வேறு கருத்தாக்கங்களைத் தமிழ் மரபில் நின்று எடுத்துரைக்கிறது.இந்நூல் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட விரும்பும் அனைவருக்கும் அரிய வழிகாட்டி.தமிழில் சொல்லாக்கம் பற்றி விரிவாக எழுதப்பட்ட முதல் நூல். முதன்மையான நூல்.-முனைவர் மு.முத்துவேலு, மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர்,சென்னை.

Add to BookShelf

Overview

தமிழகத்தின் ஆட்சி மொழியாக அன்னைத் தமிழை அரியணையில் அமர்த்துவதற்குக் கலைச்சொல்லாக்கமே கைகொடுக்கிறது.இத்தகு சொல்லாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கான அடிப்படை நெறிமுறைகள், வழிமுறைகள்,வரையறைகள் அனைத்தையும் இந் நூல் வரலாற்று நோக்குடன் விளக்குகிறது.தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சிச்சொல்லகராதியுடன் சிறப்புச் சொல்லகராதிகளையும் பகுத்தாய்வு செய்து பல்வேறு கருத்தாக்கங்களைத் தமிழ் மரபில் நின்று எடுத்துரைக்கிறது.இந்நூல் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட விரும்பும் அனைவருக்கும் அரிய வழிகாட்டி.தமிழில் சொல்லாக்கம் பற்றி விரிவாக எழுதப்பட்ட முதல் நூல். முதன்மையான நூல்.-முனைவர் மு.முத்துவேலு, மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர்,சென்னை.

தமிழைச் செம்மொழி என அறிவிக்க இந்திய ஒன்றிய அரசு தயக்கம் காட்டிய வேளையில், மறைமலை இலக்குவனார் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க அறிஞர் சார்சு கார்ட்டு தமிழுக்குச் செம்மொழித் தகுநிலை அறிவிக்குமாறு விடுத்த வேண்டுகோள் ஒரு நல்ல தூண்டுகோலாய் அமைந்தது.இதனைக் கலைஞர் தமது “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்“ என்னும் நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.(பக்கம்.42) மறைமலை இலக்குவனார் தமிழ்மொழி பயிற்றுவதிலும் பரப்புவதிலும் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் திறம்படப் பணியாற்றிவருகிறார்.தம்முடைய சொந்த முயற்சியில் விருந்தியல் பேராசிரியராகவும் விருந்தியல் பொழிவாளராகவும் பல அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுவந்த ஒரே பேராசிரியர் இவரே.இணையதளத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வலைப்பூக்கள் உருவாக்கியும் கவிதை விக்கி,திருக்குறள் விக்கி என னிக்கிகளை உருவாக்கியும் இணைய இதழ்களை நடத்தியும் அயராது இணையதளத்தின் மூலமும் தமிழ்ப்பணியாற்றிவருகிறார்.அச்சுநூல்கள், மின்னூல்கள், கிண்டில்நூல்கள் என நூல்பல படைத்து நூலாசிரியராகப் பொலிவுறும் இவரது “ சொல்லாக்கம்-அமைப்பும் ஆய்வும்” என்னும்  இந் நூல் மேலும் சிறப்பு நல்குகிறது.–சொற்கோ மு.சுகுமாரன்,மாநிலச் செயலாளர்,தமிழியக்கம்,வேலூர்.

 

BOOK DETAILS
  • Hardcover: பேப்பர்பேக்
  • Publisher: எழிலினி பதிப்பகம்
  • Language: தமிழ்
  • ISBN-10:
  • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “சொல்லாக்கம் (Sollakkam)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

There are no reviews yet.

Registration

Forgotten Password?